வழக்கு விசாரணைகளின்போது வாதி, பிரதிவாதி தரப்புகளிலிருந்து பங்குபெறுவோரின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும். சமூக இடைவெளி கண்டிப்பாகக் கடைபிடிக்கப்படும். நீதிமன்றத்துக்குள் வழக்குரைஞர்களுக்கான இருக்கைகளும் சமூக இடைவெளியுடன் மாற்றி அமைக்கப்படும். வழக்கில் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், வழக்காடிகள் சார்பில் ஒரு வழக்குரைஞரும், பதிவுசெய்யப்பட்ட வழக்குரைஞர் ஒருவரும் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவர்களை நீதிமன்றப் பதிவாளர் தீர்மானிப்பார். பாதுகாக்கப்பட்ட பகுதியாக வரையறுக்கப்பட்ட நீதிமன்ற வளாகத்துக்குள் அடையாள அட்டையோ, பதிவாளரால் வழங்கப்பட்ட அனுமதிச்சீட்டோ வைத்திருப்பவர்கள் மட்டுமே செல்ல முடியும்.