டிக்டாக்கின் இந்திய நிறுவனத்தை வாங்க ஜப்பானின் ஸாப்ஃட்பேங்க் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி பாதுகாப்பு குறைபாடு காரணங்களைக் குறிப்பிட்டு சீனாவின் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யக்கோரி டிக்டாக் நிறுவனத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
டிக்டாக் நிறுவனத்தின் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் இந்திய நிறுவனத்தை விற்க அந்நிறுவனம் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து ஜப்பானின் ஸாப்ஃட்பேங்க் நிறுவனம் டிக்டாக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக அமெரிக்காவில் டிக்டாக் நிறுவனத்தை வாங்க வால்மார்ட் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


