எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ரூ.3.71 கோடி மின்சாரக் கட்டணம்: அதிர்ச்சியடைந்த ராஜஸ்தான் விவசாயி

ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயி ஒருவருக்கு மின்கட்டணமாக ரூ.3.71 கோடிக்கான பில்லை மாநில மின்சாரத்துறை அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :9 செப்டம்பர் 2020, 10:57 am

DIN

ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயி ஒருவருக்கு மின்கட்டணமாக ரூ.3.71 கோடிக்கான பில்லை மாநில மின்சாரத்துறை அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெமராம் மனதங்கி. இவர் தான் வசிக்கும் கிங்லா கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக மின்சாரத்தைப் பயன்படுத்தியதற்காக மாநில மின்துறை ரூ.3 கோடியே 71 லட்சத்து 61 ஆயிரத்து 507 தொகையை மின்கட்டணமாக உடனடியாக செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் உடனடியாக மின்சாரக்கட்டணத்தைச் செலுத்தத் தவறினால் ரூ.7.16 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான பெமராம் அருகில் தான் கரோனா ஊரடங்கு காலத்தில் விவசாய வேலைகள் எதையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

பெமராமின் இந்த மின்சாரக் கட்டண விவகாரம் சமூக ஊடங்களில் வெளியாகி மிகுந்த விமர்சனத்திற்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து, “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறுதலாக மின்சாரக் கட்டணம் அச்சிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பெமராமிற்கான புதிய மின்சாரக் கட்டணமான ரூ.6000 அனுப்பப்பட்டு அவரும் அதனைக் செலுத்திவிட்டார்.” என ராஜஸ்தான் மாநில மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.