ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தேர்வு: மேற்கு வங்கத்தில் செப்.12-ஆம் தேதி முழு பொதுமுடக்கம் ரத்து

நீட் தேர்வு நடைபெறுவதையொட்டி, மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 12 ம் தேதி பொது முடக்கத்தில் இருந்து தளர்வு அளிக்கப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

News image
முதல்வர் மம்தா பானர்ஜி
Updated On :10 செப்டம்பர் 2020, 10:03 am

DIN

நீட் தேர்வு நடைபெறுவதையொட்டி, மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 12-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட முழு பொது முடக்கம் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், நீட் தேர்வினையொட்டி, செப்டம்பர் 12 ஆம் தேதி மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட முழு பொதுமுடக்கம் திரும்பப் பெறப்படுவதாகக் கூறியுள்ளார். 

'வாரத்தில் இரு நாள்கள் முழு பொதுமுடக்கம் என்ற அடிப்படையில் செப்டம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் மேற்குவங்கத்தில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீட் தேர்வு நடைபெற உள்ளதால், மாணவர்கள் ஆர்வத்தை மனதில் வைத்து, செப்டம்பர் 12 ஆம் தேதி மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட முழு பொதுமுடக்கம் திரும்பப் பெறப்படுகிறது. 

இதனால் மாணவர்கள் 13 ஆம் தேதி எந்தவித அச்சமும் கவலையும் இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுதலாம்' என்று பதிவிட்டுள்ளார். 

மேலும், செப்டம்பர் 12 ம் தேதி முழு பொதுமுடக்கத்தை ரத்து செய்யுமாறு மாணவர்கள் தரப்பில் இருந்து அரசுக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்ததாகவும் முதல்வர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.