தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கேரளத்தில் இன்று மேலும் 3,139 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று மேலும் 3,139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :13 செப்டம்பர் 2020, 2:43 pm

DIN

கேரளத்தில் இன்று மேலும் 3,139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கேரளத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனினும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் இன்று 3,139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,08,278ஆக உயர்ந்துள்ளது. இன்றைக்கு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 36 பேர் வெளிநாடுகள் மற்றும் 126 பேர் மற்ற மாநிலங்களில் இருந்து கேரளத்துக்கு வந்தவர்கள். 2,921 பேருக்கு தொடர்பிலிருந்ததன் மூலம் தொற்று பரவியுள்ளது. 251 பேருக்கு எப்படி ஏற்பட்டது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.  

மேலும் இன்று 14 பேர் பலியானார்கள். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 439 ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,855 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 77,703ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 30,072 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.