கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது

கரோனா நோய்த்தொற்று பரவல் சூழலில் கடும் பாதுகாப்பு நடைமுறைகளுடன் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் மக்களவைத் தலைவர் ஓம்.பிர்லா தலைமையில் தொடங்கியது.

News image

நாடாளுமன்றம்.

Updated On :14 செப்டம்பர் 2020, 4:31 am

DIN

கரோனா நோய்த்தொற்று பரவல் சூழலில் கடும் பாதுகாப்பு நடைமுறைகளுடன் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் மக்களவைத் தலைவர் ஓம்.பிர்லா தலைமையில் தொடங்கியது. பிரதமர் மோடி உள்ளிட்ட எம்பிக்கள் முகக்கவசம் அணிந்தபடி இதில் பங்கேற்றுள்ளனர். 

மக்களவைத் தொடங்கியதும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மறைந்த எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மக்களவை ஒருமணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது. முதல் நாளான இன்று மக்களவை காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையும், மாநிலங்களவை 3 மணி முதல் இரண 7 மணி வரையும் நடக்கிறது. அக்டோபர் 1 வரை 18 நாள்கள் நடக்கும் கூட்டத்தொடரில் 47 மசோதாக்கள் அலுவல்களுக்காக எடுக்கப்படுகின்றன. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளுடன் கூட்டத்தொடா் நடைபெற உள்ளது. 

கூட்டத்தொடருக்காக மக்களவை, மாநிலங்களவையின் இருக்கைகள், கதவுகள் உள்ளிட்டவற்றில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரின்போது பெரும்பாலான நடவடிக்கைகளை எம்.பி.க்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எம்.பி.க்கள் அமா்வதற்காக சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தொடா் நடைபெறும்போது எம்.பி.க்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தின் 40 இடங்களில் கை சுத்திகரிப்பான் வசதி செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, கரோனா முடிவுக்கு வரும் வரை அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும். உலகின் எங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது மக்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ராணுவ வீரர்கள் லடாக் எல்லையில் சோதனைகளை எதிர்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்கின்றனர். நாடு ஒன்றுபட்டு இந்திய ராணுவ வீரர்களுக்கு வலிமை அளிக்க வேண்டும். 

நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எம்பிக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.