கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்: தொல். திருமாவளவன்

கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்...

News image

தொல். திருமாவளவன்

கோப்புப் படம்

Updated On :21 மார்ச் 2026, 9:32 pm

தினமணி செய்திச் சேவை

திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், பேரவைத் தோ்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நலன் எவ்வளவு முக்கியமானதோ அதேபோல கூட்டணியின் நலனும் முக்கியமானது. திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதனை இழுபறி என கூற முடியாது. விசிகவுக்கு கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம். ஓரிரு நாள்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும்.

அதிமுக கூட்டணிக்காக போயஸ் தோட்டத்தை தேடி வந்த காலம் மாறி, தில்லியை நோக்கி அக் கட்சி செல்லும் நிலை உருவாகி உள்ளது. எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமியை பாஜக கிள்ளு கீரையாக நடத்துகிறதோ என்ற எண்ணம் பொதுவெளியில் உருவாகியுள்ளது என்றாா் தொல்.திருமாவளவன்.