இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அதிமுக கூட்டணியில் 3 தொகுதியை கேட்டுப் பெறுவோம்: பிவி. கதிரவன் நம்பிக்கை

பார்வர்ட் பிளாக் கட்சிக்கு 3 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுப் பெறுவோம் என்று பார்வர்ட் பிளாக் கட்சி கூறியது குறித்து...

News image
பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவர் பிவி. கதிரவன்
Updated On :5 மார்ச் 2026, 3:04 am

இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை: பார்வர்ட் பிளாக் கட்சிக்கு 3 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுப் பெறுவோம் என்று பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவர் பிவி. கதிரவன் நம்பிக்கை தெரிவித்தார்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில குழு கூட்டம் மதுரை காளவாசல் பகுதியில் தனியார் மண்டபத்தில் புதன்கிழமை இரவு நடந்தது.

இதில் மாநில பொதுச் செயலாளர், தேசிய துணைத்தலைவர் பிவி. கதிரவன் தீர்மானங்கள் குறித்து பேசினார்.

தமிழ் மாநில குழுவின் முடிவுக்கும், கட்சி வளர்ச்சிக்கும் எதிராக தன்னிச்சையாக மத்திய தலைமை செயற்குழு, மத்திய குழுவிடம் ஆலோசனை பெறாமல் பிவி. கதிரவன் மீது கூறிய குற்றச்சாட்டு மாநில குழுவுக்கு எதிரானது. அந்த புகார் கடிதத்தை திரும்ப பெற வேண்டும்.

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சிங்கம் சின்னத்தில் போட்டியிடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் பிவி. கதிரவன் செய்தியாளர்களுடன் கூறுகையில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து உசிலம்பட்டி உள்பட 3 தொகுதிகளை கேட்டுப் பெற்று போட்டியிடுவோம். தமிழ் மாநில குழுவே அதிகாரம் கொண்டது. மாநிலக்குழு கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் 26 மாவட்ட செயலாளர் கையெழுத்திட்டு தேசிய குழுவுக்கு அனுப்புவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.