ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இதுவரை 5.8 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன: மத்திய சுகாதாரத் துறை

நாடு முழுவதும் இதுவரை 5.8 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :15 செப்டம்பர் 2020, 4:45 pm


நாடு முழுவதும் இதுவரை 5.8 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா நிலவரம் பற்றி செய்தியாளர் சந்திப்பில் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்ததாவது: 

"மொத்த கரோனா பாதிப்பில் 5-இல் ஒரு பகுதியினர் மட்டுமே மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சையில் உள்ளனர். 14 மாநிலங்களில் தலா 5,000-க்கும் குறைவானவர்களே சிகிச்சை பெற்று வரும் நிலையில் உள்ளனர். 18 மாநிலங்களில் தலா 5,000 முதல் 50,000 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கையில், மகாராஷ்டிரத்தில் 29.3 சதவிகிதம், கர்நாடகத்தில் 9.9 சதவிகிதம், ஆந்திரத்தில் 9.4 சதவிகிதம், உத்தரப் பிரதேசத்தில் 6.8 சதவிகிதம் மற்றும் தமிழகத்தில் 4.7 சதவிகிதம் என 5 மாநிலங்களில் மட்டும் 60 சதவிகிதத்தினர் உள்ளனர். பிற மாநிலங்களில் 39.6 சதவிகிதத்தினர் உள்ளனர்.

மே 23-ம் தேதி 50,000 பேர் குணமடைந்திருந்தனர், ஜூன் 3-இல் 1 லட்சம் பேர் குணமடைந்திருந்தனர், ஜூலை 30-இல் 10 லட்சம் பேர் குணமடைந்திருந்தனர், ஆகஸ்ட் 19-இல் 20 லட்சம் பேர் குணமடைந்திருந்தனர், செப்டம்பர் 4-இல் 30 லட்சம் பேர் குணமடைந்திருந்தனர், செப்டம்பர் 11-இல் 35 லட்சம் பேர் குணமடைந்திருந்தனர். தற்போது நாடு முழுவதும் 38.5 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட 76 லட்சம் பரிசோதனைகள் உள்பட, நாடு முழுவதும் இதுவரை 5.8 கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.