ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தில்லி: கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் 45% அதிகரிப்பு

தில்லியில் கடந்த 10 நாள்களில் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் 45 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோன்று வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

News image

தில்லி: கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் 45% அதிகரிப்பு

Updated On :16 செப்டம்பர் 2020, 11:39 am

தில்லியில் கடந்த 10 நாள்களில் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் 45 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோன்று வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

தில்லியில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. இதனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 16,576-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே இது குறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதியில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான கரோனா பாதிப்புகள் பதிவாகி வந்தன.

ஒரே நாளில் அதிகபட்சமாக செப்டம்பர் 12-ஆம் தேதி 4,321 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இம்மாத தொடக்கத்திலிருந்து புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது.

இதன் விளைவாக கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கையும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மேலும் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தில்லியில் மெட்ரோ ரயில் சேவையும் மக்கள் சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி 10,514-ஆக இருந்த கரோனா பாதிப்பு, செப்டம்பர் 15-ஆம் தேதி 16,576-ஆக அதிகரித்துள்ளது. 

செப்டம்பர் 6-ஆம் தேதி 1,076-ஆக இருந்த கரோனா பாதிப்பு, 15-ஆம் தேதி 1,560-ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 50 சதவிகிதமும், கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 45 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.