ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கர்நாடக உள்துறை அமைச்சருக்கு கரோனா

கர்நாடகத்தில் உள்துறை அமைச்சர் பசவராஜ் போமாய்க்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படடுள்ளது.

News image

கர்நாடகத்தில் உள்துறை அமைச்சர் பசவராஜ் போமாய்க்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படடுள்ளது.

Updated On :16 செப்டம்பர் 2020, 7:01 am

கர்நாடகத்தில் உள்துறை அமைச்சர் பசவராஜ் போமாய்க்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படடுள்ளது.

கர்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் போமாய்க்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''எனது வீட்டில் பணிபுரியும் நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வீட்டில் இருந்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொண்டோம். இதில் எனக்கு தொற்று இருப்பது உறுதியானது. தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லாததால், மருத்துவர்கள் அறிவுரையின்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். 

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து கரோனா பரிசோதனை செய்துகொண்டு மருத்துவர் அறிவுரையை பின்பற்றுங்கள்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.