பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கேரளத்தில் அமைச்சர் கே.டி. ஜலீலுக்கு எதிராக பா.ஜ.க. போராட்டம்

கேரளத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட பாஜகவை சேர்ந்த போராட்டக்காரர்களை தண்ணீரை பீய்ச்சியடித்து காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

News image
கேரளத்தில் அமைச்சர் ஜலீலுக்கு எதிராக பா.ஜ.க.வினர் போராட்டம்
Updated On :17 செப்டம்பர் 2020, 9:16 am

DIN

கேரளத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட பாஜகவை சேர்ந்த போராட்டக்காரர்களை தண்ணீரை பீய்ச்சியடித்து காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறி கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.கலீலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இதற்கு ஆஜராக மறுத்துவந்த அமைச்சர் கே.டி.ஜலீலுக்கு எதிராக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே இரண்டுமுறை அமலாக்கத்துறை விசாரணைக்கு அமைச்சர் ஜலீல் ஆஜரானார்.

இரண்டுமுறை நடைபெற்ற விசாரணையில் கிடைத்த தகவல்கள் முரண்பாட்டு இருந்ததால், மீண்டும் அமைச்சர் ஜலீலிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய அமைச்சர் கே.டி.ஜலீல் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் நேற்று (புதன்கிழமை) கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே இன்று திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு தலைமைச் செயலகம் முன்பு கோஷங்களை எழுப்பியதால், காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.