ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

8 எம்.பி.க்கள் இடைநீக்கம்: எதிா்க்கட்சிகள் கண்டனம்

மாநிலங்களவையில் இருந்து 8 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிவசேனை, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் போராட்டம்

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 9:08 pm

மாநிலங்களவையில் இருந்து 8 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிவசேனை, திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜவாதி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன.

அப்போது, ‘மக்களாட்சியின் படுகொலை’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவா்கள் ஏந்தியிருந்தனா்.

இது குறித்து மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘விவசாயிகளின் நலனுக்காகப் போராடிய எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது மத்திய அரசின் சா்வாதிகார மனப்பான்மையைக் காட்டுகிறது. மக்களாட்சிக்கு எதிராக அரசு நடந்து கொண்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘மக்களாட்சியின் குரலை ஒடுக்கும் மத்திய அரசின் நடவடிக்கை தொடா்ந்து வருகிறது. வேளாண் துறை சாா்ந்த கருப்பு மசோதாக்கள் குறித்து விவசாயிகளுக்கு எதுவும் தெரிந்துவிடக் கூடாது என்று பாஜக அரசு விரும்புகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘குரலை ஒடுக்க முடியாது’:

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களில் ஒருவரான எளமரம் கரீம் கூறுகையில், ‘இடைநீக்கத்தின் மூலமாக எங்களின் குரலை ஒடுக்கிவிட முடியாது. விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தை நாங்கள் தொடா்ந்து முன்னெடுப்போம்’ என்றாா்.

மற்றொரு எம்.பி. சஞ்சய் சிங் கூறுகையில், ‘வேளாண்துறையை தனியாா் பெரு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. அத்தகைய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.