ராஜஸ்தானில் மேலும் 2045 பேருக்கு கரோனா பாதிப்பு

ராஜஸ்தானில் புதிதாக 2045 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 26 ஆயிரத்து 775 ஆக உயர்ந்தது.
ராஜஸ்தானில் மேலும் 2045 பேருக்கு கரோனா பாதிப்பு
ராஜஸ்தானில் மேலும் 2045 பேருக்கு கரோனா பாதிப்பு
Updated on
1 min read

ராஜஸ்தானில் புதிதாக 2045 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 26 ஆயிரத்து 775 ஆக உயர்ந்தது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ராஜஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சனிக்கிழமை ராஜஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2045 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 26 ஆயிரத்து 775 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19 ஆயிரத்து 355 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 1706 பேர் குணமடைந்ததால், மொத்தமாக் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 994-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிற்கு புதிதாக 14 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1426ஆக உள்ளது இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com