மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கேரளத்தில் 7 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய பாதிப்பு

​கேரளத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 7,006 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :26 செப்டம்பர் 2020, 2:36 pm


கேரளத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 7,006 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, கேரளத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,66,939 ஆக உயர்ந்துள்ளது. இதில் 50,000 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 58,799 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

மேலும் 21 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 656 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,199 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,14,530 பேர் குணமடைந்துள்ளனர். 

புதிதாக தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டவர்களில் 68 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 177 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 6,668 பேர் உள்ளூர் பரவல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,446 பேர் இன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளத்தில் கடந்த சில நாள்களாகவே கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

புதன்கிழமை - 5,376
வியாழக்கிழமை - 6,324
வெள்ளிக்கிழமை - 6,477
இன்று (சனிக்கிழமை) - 7,006 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.