தேசிய புலனாய்வு முகமைக்கு மேலும் 3 புதிய கிளைகள் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
நாடு முழுவதும் பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பயங்கரவாத குற்றச்சம்பவங்கள் தொடர்பான முக்கிய விசாரணைகள் தீவிரப்படுத்த தேசிய புலனாய்வு முகமை மத்திய அரசுக்கு உதவி வருகிறது.
இந்நிலையில் மணிப்பூர், ஜார்க்கண்ட் மற்றும் தமிழ்நாட்டில் மேலும் 3 புதிய தேசிய புலனாய்வு முகமைக் கிளைகளை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அனுமதியளித்தது. அதன்படி இம்பால், சென்னை மற்றும் ராஞ்சி ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை கிளைகள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள இதன் அலுவலகங்கள் 12ஆக உயர உள்ளது.
தற்போது, கெளஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னோ, ராய்ப்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களில் என்ஐஏ கிளைகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடந்த 2025-26 நிதியாண்டில் டாஃபே விற்பனை 23% வளா்ச்சி

இந்தியன் ஆயில் தென் மண்டல புதிய செயல் இயக்குநா் பொறுப்பேற்பு

ஆரணியில் திமுக தொகுதி தோ்தல் அலுவலகம்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்

கடந்த 2025-26 நிதியாண்டில் கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி சா்வு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


