தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தேசிய புலனாய்வு முகமைக்கு மேலும் 3 புதிய கிளைகள்

தேசிய புலனாய்வு முகமைக்கு மேலும் 3 புதிய கிளைகள் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. 

News image

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)

Updated On :29 செப்டம்பர் 2020, 6:02 am

தேசிய புலனாய்வு முகமைக்கு மேலும் 3 புதிய கிளைகள் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. 

நாடு முழுவதும் பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பயங்கரவாத குற்றச்சம்பவங்கள் தொடர்பான முக்கிய விசாரணைகள் தீவிரப்படுத்த தேசிய புலனாய்வு முகமை மத்திய அரசுக்கு உதவி வருகிறது.

இந்நிலையில் மணிப்பூர், ஜார்க்கண்ட் மற்றும் தமிழ்நாட்டில் மேலும் 3 புதிய தேசிய புலனாய்வு முகமைக் கிளைகளை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அனுமதியளித்தது. அதன்படி இம்பால், சென்னை மற்றும் ராஞ்சி ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை கிளைகள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள இதன் அலுவலகங்கள் 12ஆக உயர உள்ளது.

தற்போது, கெளஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னோ, ராய்ப்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களில் என்ஐஏ கிளைகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.