/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 18,317 பேருக்கு கரோனா

​மகாராஷ்டிரத்தில் புதிதாக 18,317 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :30 செப்டம்பர் 2020, 3:38 pm


மகாராஷ்டிரத்தில் புதிதாக 18,317 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,84,446 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 481 பேர் பலியாகியுள்ளனர், 19,163 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 36,662 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 10,88,322 பேர் குணமடைந்துள்ளனர். 2,59,033 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு குணமடைவோர் விகிதம் 78.61 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.65 சதவிகிதமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.