தில்லியில் இன்று மட்டும் 1,877 பேருக்கு கரோனா உறுதி

​தில்லியில் புதிதாக 1,877 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் இன்று மட்டும் 1,877 பேருக்கு கரோனா உறுதி


தில்லியில் புதிதாக 1,877 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக இன்று (வியாழக்கிழமை) 1,877 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 65 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,687 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி 1,085 ஆக உள்ளது.

மொத்தம் 12,731 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய தேதியில் 20,871 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com