தாராவியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 25 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவலை மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அங்கு புதிதாக 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,068 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 77 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.