தாராவியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 17 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாராவி:
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 17 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,106 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒருவர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை:
மும்பையில் புதிதாக 1,359 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 77 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 61,501 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 3,242 ஆக உயர்ந்துள்ளது.