தாராவியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 28 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தகவலை மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,134 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு 78 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.