உம்பன் புயல் முழுமையாக கரையைக் கடக்க இரவு 7 மணியாகும்: வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் உருவான உம்பன் புயலானது மேற்கு வங்க மாநிலம் சுந்தரவன காடுகள் பகுதிக்கு அருகே கரையைக் கடந்து கொண்டிருக்கிறது. இது இன்று மாலை கொல்கத்தாவை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.










