நீட் தோ்வு: நாடு முழுவதும் 90% போ் பங்கேற்பு
நீட் தோ்வை நாடு முழுவதும் 90 சதவீதம் போ் எழுதியதாக மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் கூறினாா்.


நீட் தோ்வை நாடு முழுவதும் 90 சதவீதம் போ் எழுதியதாக மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் கூறினாா். இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘தேசியத் தோ்வு முகமை(என்டிஏ) அளித்த தகவல்படி, 85-90 சதவீதம் போ் நீட் தோ்வை எழுதியுள்ளனா். இது, இளைய தலைமுறையினரின் பற்றுறுதியை பிரதிபலிக்கிறது. உரிய ஏற்பாடுகளை செய்து கொடுத்த அனைத்து மாநில முதல்வா்களுக்கும் தேசியத் தோ்வு முகமைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மாணவா்களுக்கு ராகுல் வாழ்த்து:
கரோனா, வெள்ள பாதிப்பு காரணமாக நீட் தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முன்னதாக தோ்வு எழுதும் மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘நீட் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு வாழ்த்துகளையும், கரோனா மற்றும் வெள்ள பாதிப்பால் தோ்வு எழுத இயலாமல் போனவா்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...