மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 364 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 காவலர்கள் உயிரிழந்தனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் அதிக அளவு கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் அதிக அளவிலான காவலர்களுக்கு கரோனா தொற்று பரவி வருகிறது.
அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 364 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 20,367 காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,796 காவலர்கள் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா தொற்றிலிருந்து 16,363 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4 காவலர்கள் உயிரிழந்ததால், கரோனா தொற்றால் இறந்த காவலர்களின் எண்ணிக்கை 208-ஆக அதிகரித்துள்ளது.