பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகம் ஜனவரி 5 முதல் திறப்பு

கரோனா தொற்று காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகம் ஜனவரி 5ஆம் தேதி முதல் மக்கள் வருகைக்காக திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

குடியரசுத் தலைவர் மாளிகை

Updated On :1 ஜனவரி 2021, 9:01 pm IST

கரோனா தொற்று காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகம் ஜனவரி 5ஆம் தேதி முதல் மக்கள் வருகைக்காக திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் மக்கள் கூடும் அனைத்து இடங்களும் கரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டன. அவ்வகையில் குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகமும் தேதி குறிப்பிடாமல் மூடப்பட்டது.

இந்நிலையில் நாட்டில் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகம் ஜனவரி 5ஆம் தேதி முதல் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திங்கள்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்களைத் தவிர மற்ற நாள்களில் அருங்காட்சியகம் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.