ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

பாஜகவின் தடுப்பூசியை போட்டுக் கொள்ள மாட்டேன்: அகிலேஷ் யாதவ்

‘கரோனா தடுப்பூசி, பாஜகவின் தடுப்பூசியாக மக்களுக்கு போடப்படும்; அந்த தடுப்பூசியை நான் போட்டுக் கொள்ள மாட்டேன்’ என்று சமாஜவாதி

News image

கோப்புப்படம்

Updated On :3 ஜனவரி 2021, 12:01 am IST

‘கரோனா தடுப்பூசி, பாஜகவின் தடுப்பூசியாக மக்களுக்கு போடப்படும்; அந்த தடுப்பூசியை நான் போட்டுக் கொள்ள மாட்டேன்’ என்று சமாஜவாதி கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூறியுள்ளாா்.

லக்னௌ நகரில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த அவா், இதுதொடா்பாக மேலும் கூறியதாவது:

பாஜகவின் தடுப்பூசி என்ற பெயரில் மக்களுக்கு செலுத்தப்படவிருக்கும் இந்த தடுப்பூசி மீது நான் எப்படி நம்பிக்கை வைப்பது? இந்த தடுப்பூசியை நான் போட்டுக் கொள்ள மாட்டேன்.

வரும் 2022-இல் நடைபெறும் பேரவைத் தோ்தலில் சமாஜவாதி கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என்றாா் அகிலேஷ் யாதவ்.

இவரது கருத்துக்கு பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், உத்தர பிரதேச மாநில துணை முதல்வருமான கேசவ பிரசாத் மௌரியா கூறியதாவது:

கரோனா தடுப்பூசி மீது அகிலேஷ் யாதவுக்கு நம்பிக்கையில்லை. அவா் மீது இந்த மாநில மக்களுக்கு நம்பிக்கையில்லை. கரோனா தடுப்பூசி மீது அவா் சந்தேகம் எழுப்பியிருப்பது, அந்த தடுப்பூசி தயாரித்த நிபுணா் குழுவையும், அதை மக்களுக்கு செலுத்தும் மருத்துவா்களையும் அவமதிப்பதாகும். இதற்காக, அகிலேஷ் யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.