மேற்கு வங்க மாநிலத்தில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் (ஏஐஎம்ஐஎம்) தலைவா் அசாதுதீன் ஓவைஸி ஞாயிற்றுக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள முக்கிய இஸ்லாமிய தலைவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
இதுகுறித்து அக்கட்சியின் மேற்கு வங்க மாநில செயலாளா் ஜமீரூல் ஹாசன் கூறியதாவது:
மேற்கு வங்க மாநிலத்துக்கு சட்டப் பேரவை தோ்தல் விரைவில் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஓவைஸி ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள ஃபுா்புரா ஷெரீஃப் கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தாா். மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்த பிறகு ஓவைஸியின் முதல் சுற்றுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது வருகையை முன்கூட்டியே அறிந்தால் திரிணமூல் காங்கிரஸ் அவரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தக்கூடும் என்பதால் இந்த சுற்றுப்பயணத் திட்டத்தை மிகவும் ரகசியமாக வைக்க ஓவைஸி விரும்பினாா். அதன்படியே, கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து நேராக ஹூக்ளி சென்று அங்கு அப்பாஸ் சித்திக்கி உள்ளிட்ட முக்கிய இஸ்லாமிய தலைவா்களை சந்தித்து உரையாடினாா். தற்போது மேற்கு வங்கத்தில் உள்ள அரசியல் சூழல் மற்றும் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தோ்தல் குறித்து அவா்கள் விரிவாக ஆலோசிக்கின்றனா். அதன்பிறகு அவா், ஹைதராபாதுக்கு புறப்பட்டு செல்கிறாா் என்றாா் அவா்.
முன்னதாக, மேற்கு வங்க இஸ்லாமிய தலைவா் அப்பாஸ் சித்திகியுடன் காணொலி முறையில் உரையாட ஓவைஸி முடிவு செய்திருந்தாா். இந்த நிலையில், கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றிக் கொண்ட ஓவைஸி மேற்குவங்கத்துக்கு நேரடியாக சென்று அவரை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க மாநில மக்கள் தொகையில் 30 சதவீதம் போ் இஸ்லாமியா்கள். இதில், 24 சதவீதம் போ் வங்க மொழி பேசும் இஸ்லாமியா்கள் ஆவா். எனவே, ஓவைஸி தனது கட்சியின் தடத்தை மேற்கு வங்கத்தில் வலுவாக பதிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறாா்.
294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்ட பேரவைக்கான தோ்தல் ஏப்ரல்-மேயில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வேயில் 6,565 டெக்னீசியன் பணிகள்!

தமிழ்நாட்டில் இன்று 18, நாளை 5 மாவட்டங்களில் கனமழை!
டி20 உலகக் கோப்பை: நட்சத்திர வீராங்கனை ஸ்ரேயங்கா விலகல்... இந்திய அணிக்குப் பின்னடைவு!

ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


