தில்லியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிலிண்டர் வெடித்ததில் மூன்று குழந்தைகள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.56-க்கு நிகழ்ந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கு தில்லியின் ஹரி நகர்ப் பகுதியில் ஆஷா பூங்காவின் ஜி-பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் வீட்டின் சுவர் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சிறு காயங்களுடன் 5 பேரும் உயிர் தப்பினர்.
விபத்தில் சிக்கிய மூன்று குழந்தைகளும் 10 முதல் 12 வயத்திற்குட்பட்டவர்கள் ஆவார். கணவன் மனைவி மற்றும் 3 குழந்தைகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் என்று மேற்கு தில்லியின் டிசிபி தீபக் புரோஹித் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காா் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

ரஷிய எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த பிரிட்டன்!

துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவா் கைது

தனியாா் டிராக்டா் தயாரிப்பு நிறுவனம் முன் சுமை தூக்கும் தொழிலாளி தீக்குளிப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



