தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: 3-வது நாளாக விமானச் சேவைகள் ரத்து

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதன் காரணமாக மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையான இன்றும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

News image

Flight operations at Srinagar airport suspended for third consecutive day

Updated On :5 ஜனவரி 2021, 11:44 am IST

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதன் காரணமாக மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையான இன்றும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பனிப்பொழிவு சீரடைந்த பின்னரே விமானங்களை இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என விமான நிலைய அதிகாரி ஒருவா் தெரிவித்தார்.

ஸ்ரீநகர் விமான நிலைய ஓடுபாதையில் உள்ள பனிப்பொழிவு தற்போது அகற்றப்பட்டுள்ளது. இருப்பினும் கடும் பனிப்பொழிவு காரணமாக விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்று இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். 

கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை முழுவதும் கடும் பனிப்பொழிவு தொடர்ந்து நிலவி வருவதால் விமான நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இந்த பனிப்பொழிவானது தொடர்ந்து புதன்கிழமை காலை வரை மிதமானது முதல் கடுமையான பனிப்பொழிவு நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.