பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை பேசினார்.
இதுபற்றி பிரதமர் அலுவலகம் தெரிவித்ததாவது:
"பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்ததற்கு பிரிட்டன் பிரதமர் ஜான்சன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். அதேசமயம் பிரிட்டனில் நிலவும் கரோனா சூழல் காரணமாக குடியரசு தின விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருத்தமும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இந்தியா வருவதற்கான ஆர்வத்தினை அவர் வெளிப்படுத்தினார். பிரிட்டனில் நிலவும் தவிர்க்க முடியாத சூழலைப் புரிந்துகொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் , பிரிட்டனில் பரவும் பெருந்தொற்றை விரைவில் கட்டுப்படுத்தவும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்."
முன்னதாக, பிரிட்டனில் பரவும் புதிய வகை கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக, குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

12 ஆண்டு தூய்மை இந்தியா திட்டம்... அனைவருக்கும் தரமான சுகாதார சேவை! பிரதமர் மோடி

ஹரி இயக்கத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா?

கூப்பர் கானலி முதல் சதம்..! ஆறுதல் வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா!

டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்துக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



