அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

வேளாண் சட்டங்களை இன்றே திரும்பப் பெற வேண்டும்: விவசாயிகள்

வேளாண் சட்டங்களை இன்றே திரும்பப் பெறுவதானால் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தட்டும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

News image

வேளாண் சட்டங்களை இன்றே திரும்பப் பெற வேண்டும்: விவசாயிகள்

Updated On :8 ஜனவரி 2021, 12:14 pm IST

வேளாண் சட்டங்களை இன்றே திரும்பப் பெறுவதானால் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தட்டும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தில்லியில் 44-வது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், மத்திய அரசு விவசாயிகளுடன் இன்று 8-வது கட்டமாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.

ஏற்கனவே 7 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், இன்று (ஜன. 8) மீண்டும் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதனிடையே இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி பல்வீந்தர் சிங் ராஜூ, ''பிரிவு வாரியாக பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை. வேளாண் சட்டங்களை இன்றே திரும்பப் பெறுவதாக இருந்தால் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வரட்டும்'' என்று கூறினார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியிn பல்வேறு எல்லைகளில் 44-வது நாளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.