விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

‘வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம்’: பதாகைகளுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற விவசாயிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தையொட்டி நடைபெற்ற 8ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் போராட்டத்தில் வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம் என்ற பதாகைகளுடன் விவசாயிகள் பங்கேற்றனர்.

News image

‘வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம்’: பதாகைகளுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற விவசாயிகள்

Updated On :8 ஜனவரி 2021, 6:31 pm IST

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தையொட்டி நடைபெற்ற 8ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் போராட்டத்தில் வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம் என்ற பதாகைகளுடன் விவசாயிகள் பங்கேற்றனர்.

மத்திய அரசு - விவசாயிகள் இடையே 8ஆம் கட்ட பேச்சுவார்த்தை தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கியது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 44-வது நாளாக தில்லி எல்லைகளில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசுடன் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற 7-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்று 8ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அப்போது விவசாயிகள் சார்பாக பங்கேற்ற பிரதிநிதிகள் ‘வேளாண் போராட்டங்களில் வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம்’ ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் பங்கேற்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.