சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

மேற்கு வங்கம்: திரையரங்கில் 100% ரசிகர்களுக்கு அனுமதி

மேற்கு வங்கத்தில் திரையரங்கில் 100 சதவிகிதம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கி முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

News image

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)

Updated On :9 ஜனவரி 2021, 2:21 pm IST


மேற்கு வங்கத்தில் திரையரங்கில் 100 சதவிகிதம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கி முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

எனினும் திரையரங்குகளில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா 2021-ல் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்று பேசிய அவர், கரோனா பெருந்தொற்றால் 50 சதவிகித ரசிகர்களுக்கு மட்டுமே திரையரங்கில் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது திரையரங்கில் 100 சதவிகிதம் ரசிகர்களை அனுமதிக்கலாம். ஆனால் முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் காணொலி வாயிலாக  கலந்துகொண்டார்.

ஏற்கெனவே தமிழகத்தில் திரையரங்கில் 100 சதவிகிதம் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு மத்திய அரசின் கரோனா கட்டுப்பாடுகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உள்ளதாக உள்துறை செயலாளர் அஜய், தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.