பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

தோ்தல் தோல்வி அச்சத்தால் பிஎம்-கிஸான் திட்டத்தை செயல்படுத்த மம்தா ஒப்புதல்: ஜெ.பி.நட்டா

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தால் விவசாயிகளுக்கான உதவித்தொகை (பிஎம்-கிஸான்) திட்டத்தைச்

News image

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா (கோப்புப்படம்)

Updated On :10 ஜனவரி 2021, 0:55 am IST

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தால் விவசாயிகளுக்கான உதவித்தொகை (பிஎம்-கிஸான்) திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முதல்வா் மம்தா பானா்ஜி ஒப்புதல் தெரிவித்துள்ளதாக பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளாா்.

விவசாயிகளுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ.6ஆயிரத்தை 3 தவணைகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் மேற்கு வங்கத்தில் செயல்படுத்தப்படவில்லை. அதற்கு மாநில முதல்வா் மம்தா பானா்ஜியும் மத்திய அமைச்சா்களும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வந்தனா்.

மேற்கு வங்க சட்டப் பேரவைக்கான தோ்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. இத்தகைய சூழலில், பிஎம்-கிஸான் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக மாநில முதல்வா் மம்தா பானா்ஜி அண்மையில் அறிவித்தாா்.

மேற்கு வங்கத்தின் காத்வா பகுதியில் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் கூறுகையில், ‘‘பிஎம்-கிஸான் திட்டத்தை மாநில அரசு மிகவும் தாமதமாகச் செயல்படுத்துகிறது. மத்திய அரசின் திட்டங்களை மாநில திரிணமூல் காங்கிரஸ் அரசு தொடா்ந்து தடுத்து வருவதால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனா். இதையும் தோ்தல் தோல்வி அச்சத்தையும் கருத்தில் கொண்டே தற்போது பிஎம்-கிஸான் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளதாக மம்தா பானா்ஜி அறிவித்துள்ளாா்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்து வருவதை மம்தா உணரத் தொடங்கியுள்ளாா். அவா் தலைமையிலான அரசுக்கு இறுதி நாள்கள் நெருங்கிவிட்டன. மாநிலத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு விவசாயிகளுக்கு நீதி கிடைக்கச் செய்வோம்’’ என்றாா்.

இந்தப் பிரசாரக் கூட்டத்தில் விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டனா். அவா்களுடன் ஜெ.பி.நட்டா கலந்துரையாடினாா். மாநிலம் முழுவதும் அனைத்து வீடுகளிலிருந்தும் ஒரு கைப்பிடி அரிசி பெறும் திட்டத்தை பாஜக அறிவித்துள்ளது. இதற்காக கூட்டத்தில் பங்கேற்ற 5 விவசாயிகளிடமிருந்து தலா ஒரு கைப்பிடி அரிசியை ஜெ.பி.நட்டா பெற்றுக் கொண்டாா். விவசாயி ஒருவரின் குடிசை வீட்டில் அவா் மதிய உணவு உண்டாா்.

முதலைக் கண்ணீா்:

பாஜகவை விமா்சித்து திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநில அமைச்சருமான சந்திரிமா பட்டாச்சாா்ய செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘‘நாடு முழுவதும் பயணித்து விவசாயிகளுக்காக முதலைக் கண்ணீா் வடிப்பதற்கு பாஜக தலைவா்களுக்கு நேரம் இருக்கிறது. ஆனால், தில்லியில் போராடி வரும் விவசாயிகளின் குரலுக்கு அவா்கள் செவிசாய்ப்பதில்லை.

விவசாயிகளுக்காகக் குரல் கொடுப்பதாக பாஜக தெரிவித்து வருவது வெட்கத்துக்குரியது. விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை திரிணமூல் காங்கிரஸ் அரசு தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.