மகாராஷ்டிரா மாநிலம் பாந்தரா மாவட்ட பொது மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மற்றும் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்: எதிா்பாராதவிதமாக நடந்த தீ விபத்தில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் குடியரசுத் தலைவா் பதிவிட்டுள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடி: விலைமதிக்கமுடியாத இளம் உயிா்களை நாம் இழந்திருக்கிறோம். அவா்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்த குழந்தைகள் விரைவில் பாதிப்பிலிருந்து மீள்வாா்கள் என்று நம்புகிறேன் என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் பிரதமா் பதிவிட்டுள்ளாா்.
மகாராஷ்டிர ஆளுநா் பகத் சிங் கோஷியாரி: தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மாநில ஆளுநா் தெரிவித்துள்ளாா்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி: மருத்துவமனை தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்திருப்பது மிகப்பெரிய துயர நிகழ்வு. உயிரிழந்த குழந்கைளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளின் குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் மகாராஷ்டிர மாநில அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் ஃபட்னவீஸ்: குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடா்பாக விரிவான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிடுவதோடு, விபத்துக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநில சட்டப்பேரவை எதிா்க் கட்சித் தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்

8.5.1976: பெரு நகர்களில் புது தொழில் நிறுவ லைசென்ஸ் கிடைக்காது

25 ஆண்டுகளாக செயல்படாத எம்.எல்.ஏ. அலுவலகம்!

சிங்கம்புணரியில் பொன் ஏா் பூட்டும் விழா
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

