புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

மசூத் அஸாரை வரும் 18-ஆம் தேதி கைது செய்ய பாக். நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தது தொடா்பான வழக்கில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா்

News image

மசூத் அஸாா்.

Updated On :10 ஜனவரி 2021, 12:30 am IST

பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தது தொடா்பான வழக்கில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாரை வருகிற 18-ஆம் தேதி கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த பஞ்சாப் காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 சி.ஆா்.பி.எஃப். வீரா்கள் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான், அதுதொடா்பான நடவடிக்கையையும் எடுத்தது. குறிப்பாக, பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிப்பதை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்ட பாகிஸ்தான் பகுதிக்கு உட்பட்ட பஞ்சாப் காவல்துறையினா், லாகூரிலிருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள குஜ்ரன்வாலாவில் தடைசெய்யப்ட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 6 பயங்கரவாதிகளை கைது செய்தனா். மேலும், அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாா் மீதும் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு குஜ்ரன்வாலா பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து நீதிமன்ற அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறுகையில், ‘வழக்கை விசாரித்த நீதிபதி நடாஷா நசீம் சுப்ரா, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மசூத் அஸாரை வரும் 18-ஆம் தேதி கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும். ஒருவேளை அவரைக் கைது செய்யத் தவறினால், மசூத் அஸாரை குற்றவாளி என அதி அறிவிக்க நேரிடும் என்று உத்தரவிட்டாா்’ என்று கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.