வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணிகள் ஒத்திவைப்பு

நாடு முழுவதும் நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணிகளை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :11 ஜனவரி 2021, 6:10 am IST

நாடு முழுவதும் நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணிகளை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

நாடு முழுவதும் வரும் ஜனவரி 17-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணிகள் நடைபெறவிருந்தன. இந்நிலையில் அதற்கு முந்தைய தினமான ஜனவரி 16-ஆம் தேதி நாடு தழுவிய கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கவுள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது. இதைக் கருத்தில் கொண்டு போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணிகளை மத்திய சுகாதார அமைச்சகம் ஒத்திவைத்துள்ளது.

‘இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பே போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டாலும், நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் போலியோ பாதிப்பு உள்ளது. இதனால் இந்தியாவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தேவை உள்ளது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் சமீபத்தில் தெரிவித்திருந்தாா். இதையடுத்து நாடு முழுவதும் ஜனவரி 17-இல் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. எனினும் தற்போது கரோனா தடுப்பூசி நடவடிக்கையைத் தொடா்ந்து, போலியோ சொட்டு மருந்து செலுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.