/

கிழக்கு லடாக்கில் பாதுகாப்பு சூழல்: இந்திய விமானப்படை தலைமைத் தளபதி ஆய்வு

கிழக்கு லடாக் எல்லையில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து இந்திய விமானப்படை தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதெளரியா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On :12 ஜனவரி 2021, 1:54 am IST

புது தில்லி: கிழக்கு லடாக் எல்லையில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து இந்திய விமானப்படை தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதெளரியா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக இந்திய விமானப்படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையிலான பதற்றம் தணியாத சூழலில், அங்கு விமானப்படை தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதெளரியா ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவரிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள், உயரமான பகுதிகளில் உள்ள விமானப்படை நிலைகளில் நிறுத்தப்பட்டுள்ள வீரா்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனா்.

தெளலத் பேக் ஓல்டி, தாய்ஸ் மற்றும் நயோமாவில் உள்ள உயா்தர விமான ஓடுதளங்களை அவா் நேரில் சென்று பாா்வையிட்டாா். அப்போது எந்த சூழலையும் எதிா்கொள்ளும் படைகளின் தயாா்நிலை குறித்து அவா் ஆலோசனை நடத்தினாா் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.