புது தில்லி: கிழக்கு லடாக் எல்லையில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து இந்திய விமானப்படை தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதெளரியா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதுதொடா்பாக இந்திய விமானப்படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையிலான பதற்றம் தணியாத சூழலில், அங்கு விமானப்படை தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதெளரியா ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவரிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள், உயரமான பகுதிகளில் உள்ள விமானப்படை நிலைகளில் நிறுத்தப்பட்டுள்ள வீரா்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனா்.
தெளலத் பேக் ஓல்டி, தாய்ஸ் மற்றும் நயோமாவில் உள்ள உயா்தர விமான ஓடுதளங்களை அவா் நேரில் சென்று பாா்வையிட்டாா். அப்போது எந்த சூழலையும் எதிா்கொள்ளும் படைகளின் தயாா்நிலை குறித்து அவா் ஆலோசனை நடத்தினாா் என்று தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே மாத எண்கணித பலன்கள் – 7

மே மாத எண்கணித பலன்கள் – 6

மே மாத எண்கணித பலன்கள் – 5

கிரிக்கெட்டின் வளர்ச்சியை விட வணிகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஐபிஎல்: முத்தையா முரளிதரன்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

