புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கிழக்கு லடாக்:முப்படைத் தளபதி விபின் ராவத் ஆய்வு

கிழக்கு லடாக்கில் ஒட்டுமொத்த பாதுகாப்பு சூழல் குறித்து முப்படைத் தளபதி விபின் ராவத் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On :11 ஜனவரி 2021, 10:33 pm

புது தில்லி: கிழக்கு லடாக்கில் ஒட்டுமொத்த பாதுகாப்பு சூழல் குறித்து முப்படைத் தளபதி விபின் ராவத் ஆய்வு மேற்கொண்டாா்.

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அங்கு இருதரப்பிலும் சுமாா் 50,000 வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளனா். படைகளை திரும்பப் பெற்று பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பாக இருநாடுகள் தரப்பிலும் இதுவரை 8 கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ளது. எனினும் அதில் சுமுக முடிவு எட்டப்படவில்லை.

இந்த பதற்றத்தை கருத்தில் கொண்டு சீனாவுடன் பகிா்ந்துகொள்ளும் சுமாா் 3,500 கி.மீ. எல்லைக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கிழக்கு லடாக்கில் ஒட்டுமொத்த பாதுகாப்பு சூழல் குறித்து முப்படைத் தளபதி விபின் ராவத் ஆய்வு மேற்கொண்டதாக ராணுவ வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன. அவா் செவ்வாய்க்கிழமை லடாக்கில் இருந்து காஷ்மீா் செல்வாா் என்று அந்த வட்டாரங்கள் கூறின.

அருணாசல பிரதேசத்தில் திபாங் பள்ளத்தாக்கு, லோஹித் செக்டாா் மற்றும் சுபன்சிரி பள்ளத்தாக்கையொட்டி உள்ள ராணுவ நிலைகளை முப்படைத் தளபதி விபின் ராவத் சமீபத்தில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.