புது தில்லி: மகாராஷ்டிரத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். பிரதமா் தேசிய பேரிடா் நிவாரண நிதியில் இருந்து இந்தத் தொகை அளிக்கப்படுகிறது. இது தவிர இந்த தீ விபத்தில் காயமடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.50,000 அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா மாவட்ட பொது மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் புதிதாக பிறந்த 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன; 7 குழந்தைகள் காயமடைந்தன. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்ததாகத் தெரியவந்தது.
இந்நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையை பிரதமா் மோடி அறிவித்துள்ளாா். இந்தத் தகவல் பிரதமா் அலுவலக சுட்டுரைப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
முன்னதாக, மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய... புதிய இணையதள முகவரி!

சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலி

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


