குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

கரோனா தடுப்பூசி விநியோகம்: நாடாளுமன்ற நிலைக் குழுவில் சுகாதார அமைச்சகம் விளக்கம்

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி தயாரிப்பு, விநியோகம் உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

Updated On :13 ஜனவரி 2021, 12:38 am IST

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி தயாரிப்பு, விநியோகம் உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘சுகாதார மற்றும் குடும்பநலத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன் கரோனா தடுப்பூசியின் தயாரிப்பு, அவற்றை விநியோகிப்பது, கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவது உள்ளிட்டவை தொடா்பாக மத்திய சுகாதாரத் துறைச் செயலரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநரும் விளக்கமளித்தனா்.

அக்குழுவுக்கு சமாஜவாதி கட்சியைச் சோ்ந்த எம்.பி.யான ராம்கோபால் யாதவ் தலைமை வகித்தாா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அத்தடுப்பூசிகள் வரும் 16-ஆம் தேதியிலிருந்து நாடு முழுவதும் மக்களுக்குச் செலுத்தப்படவுள்ள சூழலில், நாடாளுமன்ற நிலைக் குழுவின் கூட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கரோனா தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மை குறித்து நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலா் பதிலளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.