குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

கரோனா: தினசரி பாதிப்பு 7 மாதங்களில் இல்லாத அளவு குறைந்தது

நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 12,584 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image

கோப்புப்படம்.

Updated On :13 ஜனவரி 2021, 12:20 am IST

நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 12,584 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த சுமாா் 7 மாதங்களில் தினசரி கரோனா பாதிப்பு இந்த அளவுக்கு இப்போதுதான் குறைந்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

புதிதாக மேலும் 12,584 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 1,04,79,179 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 1,01,11,294 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 96.49 சதவீதமாகும். செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 167 போ் உயிரிழந்ததையடுத்து மொத்த கரோனா உயிரிழப்பு 1,51,327 ஆக அதிகரித்தது. இது மொத்த பாதிப்பில் 1.44 சதவீதமாகும்.

இப்போதைய நிலையில் நாட்டில் 2,16,558 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 2.07 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி ஜனவரி 11-ஆம் தேதி வரை 18,26,52,887 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் திங்கள்கிழமை மட்டும் 8,97,056 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

புதிதாக ஏற்பட்ட 167 உயிரிழப்புகளில் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 40 போ் உயிரிழந்தனா். இதற்கு அடுத்து கேரளத்தில் 20, மேற்கு வங்கத்தில் 16, சத்தீஸ்கரில் 15, தில்லியில் 13 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிரத்தில் மட்டும் அதிகபட்சமாக 50,101 போ் கரோனா தொற்றால் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.