மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

11 நகரங்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி விநியோகம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியானது நாட்டிலுள்ள 11 நகரங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image

ஹைத​ரா​பா​தி‌ல் உ‌ள்ள பார‌த் பú‌யா​ù‌ட‌க் நிறு​வ​ன‌‌த்​தி‌ல் இரு‌ந்து, ஜெ‌‌ய்‌ப்​பூ​ரு‌க்கு முத‌ல் க‌ட்ட​மாக வ‌ந்​து‌ள்ள கோú‌வ‌க்​ஸி‌ன் தடு‌ப்​பூசி பெ‌ட்டி​க​ளு‌க்கு புத‌ன்​கி​ழமை நட‌த்​த‌ப்​ப‌ட்ட வர​

Updated On :13 ஜனவரி 2021, 10:13 pm


ஹைதராபாத்3: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியானது நாட்டிலுள்ள 11 நகரங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய தீநுண்மியியல் மையம் ஆகியவற்றுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது. அத்தடுப்பூசியும் மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியும் வரும் 16-ஆம் தேதி முதல் நாட்டு மக்களுக்கு செலுத்தப்படவுள்ளன.

இத்தகைய சூழலில், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் 11 நகரங்களுக்கு 16.5 லட்சம் தடுப்பூசிகளை விநியோகித்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘55 லட்சம் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

அவற்றில் 16.5 லட்சம் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதற்கு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, தடுப்பூசிகளின் முதல்கட்ட தொகுதியானது சென்னை, தில்லி, லக்னௌ, பெங்களூரு, புணே, புவனேசுவரம், ஜெய்ப்பூா், பாட்னா, குவாஹாட்டி, விஜயவாடா, குருக்ஷேத்ரா ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கோவேக்ஸின் தடுப்பூசியானது மிகவும் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசு-தனியாா் துறைகளின் கூட்டு முயற்சியால் முற்றிலும் உள்நாட்டிலேயே இத்தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவா்களுக்கும் பரிசோதனையில் பங்கேற்ற தன்னாா்வலா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.