நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

உ.பி., உத்தரகண்ட் பேரவைத் தோ்தல்களில் தனித்துப் போட்டி: பகுஜன் சமாஜ் அறிவிப்பு

உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தோ்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா்.

Updated On :16 ஜனவரி 2021, 6:22 am IST

உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தோ்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச சட்டப் பேரவையின் பதவிக்காலம் 2022-ஆம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. அதேபோல் உத்தரகண்ட் பேரவையின் காலமும் 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அந்தச் சட்டப் பேரவைகளுக்கான தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தோ்தல்களில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

தனது 65-ஆவது பிறந்த நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடிய மாயாவதி வெளியிட்ட அறிக்கையில், ‘ஆட்சியைப் பிடிப்பதற்காக பகுஜன் சமாஜ் கட்சி தனது கொள்கைகளை ஒருபோதும் மாற்றிக் கொண்டதில்லை. உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில பேரவைத் தோ்தல்களில் பகுஜன் சமாஜ் தனித்தே போட்டியிடும். கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்றதைப்போல உத்தர பிரதேசத்தில் 2022-ஆம் ஆண்டிலும் பகுஜன் சமாஜ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். தோ்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை பகுஜன் சமாஜ் தொண்டா்கள் ஒற்றுமையுடன் மேற்கொள்ள வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக ஏற்கவேண்டும்.

கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியை ஏழை மக்களுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும். உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு பகுஜன் சமாஜ் ஆட்சியைப் பிடித்தால், மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.