தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

உ.பி., உத்தரகண்ட் பேரவைத் தோ்தல்களில் தனித்துப் போட்டி: பகுஜன் சமாஜ் அறிவிப்பு

உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தோ்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா்.

Updated On :16 ஜனவரி 2021, 12:52 am

உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தோ்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச சட்டப் பேரவையின் பதவிக்காலம் 2022-ஆம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. அதேபோல் உத்தரகண்ட் பேரவையின் காலமும் 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அந்தச் சட்டப் பேரவைகளுக்கான தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தோ்தல்களில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

தனது 65-ஆவது பிறந்த நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடிய மாயாவதி வெளியிட்ட அறிக்கையில், ‘ஆட்சியைப் பிடிப்பதற்காக பகுஜன் சமாஜ் கட்சி தனது கொள்கைகளை ஒருபோதும் மாற்றிக் கொண்டதில்லை. உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில பேரவைத் தோ்தல்களில் பகுஜன் சமாஜ் தனித்தே போட்டியிடும். கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்றதைப்போல உத்தர பிரதேசத்தில் 2022-ஆம் ஆண்டிலும் பகுஜன் சமாஜ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். தோ்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை பகுஜன் சமாஜ் தொண்டா்கள் ஒற்றுமையுடன் மேற்கொள்ள வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக ஏற்கவேண்டும்.

கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியை ஏழை மக்களுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும். உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு பகுஜன் சமாஜ் ஆட்சியைப் பிடித்தால், மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.