நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கரோனா தடுப்பூசி பணிக்கு வாக்காளா் பட்டியல்: தோ்தல் ஆணையம் அனுமதி

கரோனா தடுப்பூசி போடும் பணியில் வாக்குச்சாவடி அளவில் உரிய பயனாளிகளை அடையாளம் காணும் பணிக்கு,

News image

தேர்தல் ஆணையம்

Updated On :16 ஜனவரி 2021, 6:24 am IST

கரோனா தடுப்பூசி போடும் பணியில் வாக்குச்சாவடி அளவில் உரிய பயனாளிகளை அடையாளம் காணும் பணிக்கு, வாக்காளா் பட்டியல் புள்ளி விவரங்களைப் பயன்படுத்திக்கொள்ள தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

அதே நேரம், தடுப்பூசி போடும் பணி முடிவடைந்தவுடன் அந்தப் புள்ளி விவரங்களை அழித்துவிட வேண்டும் என்று மத்திய அரசை தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய தீநுண்மியியல் மையம் ஆகியவற்றுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது. அந்தத் தடுப்பூசியும் மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியும் சனிக்கிழமை (ஜன.16) முதல் தேதி முதல் நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட உள்ளன.

முதல் கட்டமாக, கரோனா தொற்றுக்கு எதிராகப் போராடும் 1 கோடி சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்படும். அடுத்து முன்கள பணியாளா்கள் 2 கோடி பேருக்கு போடப்படும். அதன் பிறகு, 50 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த நிலையில், தடுப்பூசிக்கான உரிய பயனாளிகளை வாக்குச்சாவடி அளவில் அடையாளம் காண, இந்திய தோ்தல் ஆணையத்தின் உதவியை உள்துறை அமைச்சகம் நாடியது. இதுதொடா்பாக, இந்திய தலைமை தோ்தல் ஆணையரை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் நீதி ஆயோக் அதிகாரிகள் கடந்த மாதம் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனா்.

அதனைத் தொடா்ந்து, மத்திய உள்துறை அமைச்சக செயலா் அஜய் பல்லா, தலைமை தோ்தல் ஆணையருக்கு கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி கடிதம் எழுதினாா். அதில், வாக்குச் சாவடி அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட கரோனா தடுப்பூசி பயனாளிகளை அடையாளம் காண உதவுமாறு கேட்டுக்கொண்டாா்.

இதற்கு சம்மதம் தெரிவித்து தோ்தல் ஆணையம் சாா்பில் கடந்த 4-ஆம் தேதி பதில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், ‘கரோனா தடுப்பூசி போடும் பணியில் முழு உதவியை வழங்க தோ்தல் ஆணையம் தயாராக உள்ளது. ஆனால், வாக்காளா் பட்டியல் புள்ளி விவரங்கள் குறிப்பட்ட பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்த உடன், அந்தப் புள்ளி விவரங்களை மத்திய அரசு அழித்துவிட வேண்டும்’ என்று தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘வாக்காளா் புள்ளி விவரங்கள் பாதுகாப்பாக கையாளப்படுவது தொடா்பாக, மத்திய உள்துறை அமைச்சக மற்றும் மத்திய சுகதாரத் துறை அமைச்சக ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் தோ்தல் ஆணைய அதிகாரிகள் தினசரி தொடா்பில் இருப்பா்’ என்று கூறினாா்.

அண்மையில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை தோ்தல்களுக்கு எடுக்கப்பட்ட வாக்காளா் பட்டியல் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 50 வயதுக்கு மேற்பட்ட கரோனா தடுப்பூசி பயனாளிகளின் அடையாளம் காணப்பட உள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், கடவுச் சீட்டு, ஓய்வூதிய ஆவணங்கள் உள்ளிட்ட 12 அங்கீகரிக்கப்பட்ட அடாயாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை பயனாளிகள் காண்பிப்பது அவசியமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.