சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஜி7 உச்சி மாநாடு: பிரதமர் மோடிக்கு பிரிட்டன் அழைப்பு

ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஜனவரி 2021, 11:35 am


ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது.

ஜி7 உச்சி மாநாடு வரும் ஜுன் 11 முதல் 14 வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரிய நாடுகளிலிருந்தும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் கரோனாவைத் தோற்கடித்தது, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் பலன்களை அனைத்துப் பகுதி மக்களும் அனுபவிப்பதை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

மேலும் ஜி7 மாநாட்டுக்கு முன்பு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வரலாம் என்றும் பிரிட்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா தொற்றால் போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.