இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 36,71,242 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 36,71,242 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாம் கட்ட கரோனா வைரஸ் தடுப்பூசி வியாழக்கிழமை முதல் நாடு முழுவதும் தொடங்கியது.
இதில் முதல்கட்டமாக 33,65,597 பேருக்கும், இரண்டாவது கட்டமாக 3,05,645 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்றுவரை மொத்தம் 6,87,89,138 கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது வரை, மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 65,19,976 பேருக்கும், இதைத் தொடர்ந்து குஜராத்தில் 61,65,176 பேருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 81,466 கரோனா தொற்றும், 469 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...