எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மகாராஷ்டிரத்தில் மீண்டும் பொதுமுடக்கமா?: உத்தவ் விளக்கம்

மகாராஷ்டிரத்தில் ஓரிரு நாள்களில் பொதுமுடக்கம் விதிக்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

News image
உத்தவ் தாக்கரே
Updated On :2 ஏப்ரல் 2021, 4:37 pm

DIN


மகாராஷ்டிரத்தில் ஓரிரு நாள்களில் பொதுமுடக்கம் விதிக்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் இன்று (ஏப்.2) ஒரு நாளில் மட்டும் 47,872 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே இது குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியதாவது, நான் ஊரடங்கு உத்தரவி பிறப்பிக்கவில்லை. மாறாக கரோனா பரவல் குறித்து எச்சரிக்கை விடுக்கிறேன்.

ஊரடங்கு விதிக்காத வகையில் கரோனாவை கட்டுப்படுத்த மாற்று வழிகள் கிடைக்கவில்லையெனில் அடுத்த ஓரிரு நாள்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது குறித்து அறிவிக்கப்படும்.

ஊரடங்கு உத்தரவால் பொருளாதார சீரழிவு ஏற்படும். சுகாதாரப் பணியாளர்கள் வீதிவரை சென்று மக்களுக்கு பரிசோதனைகளை செய்ய வேண்டும். ஆனால் சுகாதாரப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.