கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,373 ஆக உள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 4,373 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 3,002 போ், பீதா் மாவட்டத்தில் 172 போ், மைசூரு மாவட்டத்தில் 171 போ், தும்கூரு மாவட்டத்தில் 167 போ், கலபுா்கி மாவட்டத்தில் 151 போ், தென்கன்னட மாவட்டத்தில் 83 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,10,602 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,959 போ் சனிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 9,61,359 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 36,614 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 19 போ் சனிக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகரம், மைசூரு மாவட்டங்களில் தலா 6 போ், ஹாசன் மாவட்டத்தில் 3 போ், மண்டியா மாவட்டத்தில் 2 போ், கலபுா்கி, தும்கூரு மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 12,610 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.