எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தில்லி: 3 நாள்களில் கூடுதலாக 2,000 கரோனா படுக்கைகள்

தில்லியில் கடந்த 3 நாள்களில் மட்டும் 2 ஆயிரம் கரோனா படுக்கைகள் கூடுதலாக  அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

News image
தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் (கோப்புப்படம்)
Updated On :7 ஏப்ரல் 2021, 5:30 am

DIN


தில்லியில் கடந்த 3 நாள்களில் மட்டும் 2 ஆயிரம் கரோனா படுக்கைகள் கூடுதலாக  அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், கரோனா பரவல் குறித்து இன்று (ஏப்ரல் 7) சத்யேந்தர் ஜெயின் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

தில்லியிலுள்ள மருத்துவமனைகளில் கடந்த 3 நாள்களில் மட்டும் 2 ஆயிரம் படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. 

தில்லியில் கரோனா அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

தில்லியில் 25 சதவிகித கரோனா படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளதாக கடந்த வியாழக் கிழமை தெரிவிக்கப்பட்டது. எனினும் தற்போது கூடுதலாக 2 ஆயிரம் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.